Monday, March 9, 2009

அரிசி பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி 2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 3
வர மிளகாய் 3
எண்ணெய் 2 அல்லது 3 மேசைகரண்டி
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பூண்டு 4 பல்
கறிவேப்பில்லை சிறிது
தண்ணீர் 6 கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
  • அரிசியை கழுவி கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பருப்பை கழுவி வைக்கவும்.
  • வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கட் பண்ணி வைக்கவும் .
  • குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும் .
  • பிறகு வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் தக்காளி போடவும். தக்காளி வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றவும்.
  • இப்போது உப்பு மஞ்சள் தூள் போடவும். பின்னர் சீரகம்,மிளகு,பூண்டு மூன்றையும் அரைத்து போடவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசிபருப்பை போடவும்.
  • நன்கு கலக்கி குக்கர் மூடி போட்டு வெயிட் போடவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .3 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும் .
  • பிரஷர் அடங்கியதும் மூடியை திறக்கவும்.
  • அரிசி பருப்பு சாதம் ரெடி.
குறிப்பு:
சாதத்தில் நெய் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
இது கொங்கு நாட்டு ஸ்பெஷல் .
இது மிக எளிதில் செய்யக்கூடிய சாதம்.

No comments: